தமிழகம் முழுவதும் அனைத்து பள்ளி, கல்லூரிகளை மூட உத்தரவு


நாடு முழுவதும் அனைத்து பள்ளிகளையும் மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவு.

வணிக வளாகங்கள், நீச்சல் குளங்களை மார்ச் 31 வரை மூட மத்திய அரசு உத்தரவு.

தமிழகத்தில் அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.

உயிரியல் பூங்கா, ஜிம் உள்ளிட்ட உடற்பயிற்சி மையங்கள், அருங்காட்சியகங்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.

திருமணங்களில் ஏராளமானோர் கூடுவதை தவிர்க்க வேண்டும். குறைந்த அளவே மக்கள் பங்கேற்க வேண்டும் - முதல்வர்

திருவிழாக்கள், துக்க நிகழ்வுகள் உள்ளிட்டவற்றில் அதிக அளவில் மக்கள் கூடுவதை தவிர்க்க வேண்டுகோள்.

அங்கன்வாடி மையங்கள் அனைத்தும், மார்ச் 31 ஆம் தேதி வரை மூட முதலமைச்சர் உத்தரவு

தமிழ்நாட்டில் அனைத்து திரையரங்குகள், வணிக வளாகங்கள், கேளிக்கை பூங்காக்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு

ஏற்கனவே திட்டமிட்ட நிகழ்ச்சிகள் தவிர வேறு நிகழ்ச்சிகளை திருமண மண்டபங்களில் நடத்த கூடாது.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக தமிழகத்தில் டாஸ்மாக் பார்களை மார்ச் 31 வரை மூட உத்தரவு.

10, 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் திட்டமிட்டபடி நடைபெறும் என முதலமைச்சர் அறிவிப்பு

மருத்துவம், மருத்துவம் சார்ந்த கல்லூரிகள் தொடர்ந்து இயங்கும்.

Post a Comment

0 Comments