ஆணாக மாறியவர் தன் தோழியை திருமணம் செய்ய விருப்பம்: பாதுகாப்புக்காக மாவட்ட ஆட்சியரிடம் மனு

பெண்ணாக இருந்து ஆணாக மாறியவர் தன் தோழியை திருமணம் செய்து கொள்ள ஆசை எனவும் திருமணம் செய்ய பாதுகாப்பு வேண்டும் எனவும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துள்ளார்.


தூத்துக்குடியைச் சேர்ந்த  பெண்கள் பொன்மாரி (25), ஸ்வீட்லி(22). 
ஒரே இடத்தில வேலைக்கு செல்லும் இவர்களுக்குள் பழக்கம் ஏற்பட்டது .இந்தநிலையில்  பொன்மாரி திருநம்ம்பியாக மாறி  ஸ்வீட்லியின் விருப்பத்துடன் இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்து கொண்டனர்

இந்த விஷயம் ஸ்வீட்லினின் பெற்றோருக்கு தெரியவரவே கடும் எதிர்ப்பு தெரிவித்தனர் . சுமார்  10 நாட்களுக்கு முன்னர்  இருவரும் வீட்டை விட்டு ஓடி  மதுரை பாரதி கண்ணம்மா அறக்கட்டளையில் தஞ்சம் புகுந்தனர் .

நேற்று பொன்மாரி, ஸ்வீட்லி இருவரும் திருமணம் செய்துகொண்டு  வாழ உரிய பாதுகாப்பு வழங்க வேண்டும்
என ஆட்சியர் டி.ஜி.வினய்யிடம் மனு அளித்தனர்.

இதுகுறித்து ஸ்வீட்லி கூறும்போது, நாங்கள் செவிலியர் படிப்பு படிக்கும் போதிலிருந்தே காதலிக்கிறோம். வருடங்களாக காதலித்து வருகிறோம். இப்போது திருமணம் முடித்துக்க்கொண்ட எங்களுக்கு வாழ பாதுகாப்பு வேண்டாம் என்று கூறுகிறார்

.

Post a Comment

0 Comments